கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் பெண் வீட்டாரால் வெட்டிக்கொலை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் பெண் வீட்டாரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ணாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். ஜெகன் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் டேம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த சரண்யா என்கிற 22 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்ததால் பெண் குடும்பத்தினர் அவர்கள் மீது வருத்தத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஜெகன் திருமணம் செய்தது பிடிக்காத சரண்யா குடும்பத்தினர் வேலைக்காக டேம் கூட்டு ரோடு அருகே ஜெகன் சென்றுகொண்டிருந்த போது சரண்யாவின் தந்தை அவருடைய சகோதரர்கள் 3 பேரும் அவரை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலைசெய்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த டேம் போலீசார் உயிரிழந்த ஜெகன் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.   

Related Stories: