ஒடிசா: இலவச மின்சாரம் கேட்டு ஒடிசாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் போலீஸ் தடுப்புகளை மீறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புவனேஸ்வர் நகரில் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை ஆயுதப்படை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தடுப்புகளை உடைத்து கொண்டு விவசாயிகள் சென்றதால் போலீசார் செய்வதறியாது தவித்தனர்.