சென்னை: தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து, 2-வது நாளான இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம்தொடங்கியது. அப்போது, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.