பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி. அதே ஊரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். இதனால், பதறிய பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, அருகில் உள்ள கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த கேசவன் மகன் லோகநாதன் (21) இதற்கு காரணம் என தெரியவந்தது. எனவே, மாணவியின் தந்தை இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், கல்லூரி மாணவன் லோகநாதனை கைது செய்து நடத்திய விசாரணையில், கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர், புள்ளலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அந்த வீட்டின் இருகில் இருந்த மாணவியிடம் நட்பாக பேசி பரிசு பொருள்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் மாணவி, லோகநாதனை அண்ணா என்று அழைத்து நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட லோகநாதன் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியிடம் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து, கைது செய்யப்பட்ட லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: