சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் அய்மன்சேரி கிராமத்தை சேர்ந்த நாகநாதன் என்பவரது மகன் அகிலன் (36). இவருக்கு  ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தென்னேரி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை   திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, ஏற்கனவே திருமணமானதை மறைத்து சிறுமியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி கர்ப்பிணி ஆனார்.

இதற்கிடையில் சிறுமிக்கு குழந்தை பிறந்தபிறகு அகிலனுக்கு ஏற்கனவே திருமணமானது சிறுமிக்கு தெரியவந்துள்ளது. இந்த வழக்கு கடந்த 2016ம் ஆண்டு முதல்  நடந்துவந்த நிலையில், செங்கல்பட்டு  சிறப்பு போக்சோ  நீதிமன்றத்தில் நேற்று‌ இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. இதில், அகிலன்‌ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அகிலனுககு 10ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதமும் விதித்து  செங்கல்பட்டு‌ போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பாளித்தார்.

Related Stories: