சென்னை: சென்னையில் உள்ள 74 ரயில் நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை சென்னை ரயில்வே கோட்டம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், வரும் வாரங்களில் சென்னை ரயில்வேயின் லட்சக்கணக்கான பயணிகளுக்கு விரைவாக டிக்கெட்டுகளை வழங்குவதற்காக 74 நிலையங்களில், 96 கூடுதல் ஏடிவிஎம்களை அறிமுகப்படுத்துகிறது. ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கோட்டம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பயணிகளின் தேவைக்கு ஏற்ப, ரயில் நிலையங்களில் ஏடிவிஎம்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 34 இயந்திரங்களில் இருந்து 130 எந்திரங்களாக உயர்த்தி வருகிறது.