உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உத்திரமேரூர் அடுத்த எடையம்புதூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர், நேற்று முன்தினம் மெய்யூரோடை கிராமத்திற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை மடக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.