உத்திரமேரூர் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உத்திரமேரூர் அடுத்த எடையம்புதூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர், நேற்று முன்தினம் மெய்யூரோடை கிராமத்திற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை மடக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த  இளம்பெண் இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.

உடனே கிராம மக்கள் ஒன்றிணைந்து, அந்த வாலிபரை பிடித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார், பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், சென்னை கோவிலஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழரசு (32). இவர், உத்திரமேரூர் அருகே வாடாதவூர் கிராமத்தில் உள்ள உறவினர் விட்டிற்கு சென்றபோது, தனியாக பைக்கில் வந்த இளம்பெணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், போலீசார் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: