மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உள்ள அருங்குணம் கிராமத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 15ம் தேதி முதல் மாணவியை திடீரென காணவில்லை என்றதும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மாணவியை பற்றி பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாணவியை அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (25) என்பவர்தான் கடத்தி சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.