டிராக்டர் மீது பைக் மோதி ராணுவ வீரர் பரிதாப பலி

ஆவடி: அயப்பாக்கம் அருகே டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ராணுவ வீரர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்(24). இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர், அயப்பாக்கத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்த இவர், நேற்று மதியம் தனது தங்கை கணவர் மதனுடன் பைக்கில் திருவேற்காட்டிற்கு சென்றார். அயப்பாக்கம் எம்ஜிஆர் நகர் அருகே வரும்போது, முன்னால் சென்ற டிராக்டர் மீது, பைக் மோதியது.

இதில், அருண் படுகாயமடைந்தார். மதன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ரஞ்சித் குமார்(24) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: