தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள்

தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கும்  திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி கடன் வழங்கப்படும்.

* ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் மினி டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

* பள்ளி வாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் முக்கிய இடங்களில் இலவச வைபை வசதி வழங்கப்படும்.

* தகவல் தொழில்நுட்ப புரட்சியின் 2ம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் டி.என்.டெக் சிட்டி அமைக்கப்படும்.

* 2 ஆண்டில் ரூ.4,236 கோடி மதிப்புள்ள 4,491 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு.

* தமிழகத்தில் 10,000 குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு.

* முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2000 கோடி நிதி.

* தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழ்நாட்டில், எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* வளம்மிகு வட்டாரங்கள் திட்டம், 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும்.

* ரூ.1000 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

* போக்குவரத்து துறைக்கு ரூ.8,059 கோடி நிதி ஒதுக்கீடு.

* சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.320 கோடி நிதி.

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19,465 கோடி நிதி.

* சென்னையில் 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

* சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

* 2030ம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழகத்தில் 2 லட்சம் முதலீடுகள் பெறப்பட்டு 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

* சேலத்தில் அமையும் ஜவுளி பூங்கா மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.

* இந்தியாவில் உற்பத்தியான பசுமை மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை.

* சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கூடுதலாக 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

* பத்திரப்பதிவு கட்டணம் 4 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

* மாணவர்கள் பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.40,229 கோடி ஒதுக்கீடு.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு.

* கோவையில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா, 2 கட்டங்களாக அமைக்கப்படும். முதல் கட்டத்தில் 45 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

* பழனி, திருத்தணி, சமயபுரம் கோயில்களில் ரூ.485 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.7,149 கோடி நிதி ஒதுக்கீடு.

* சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டப்படும்.

* கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா, பொழுதுபோக்கு மையம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

Related Stories: