சார்பதிவாளர் அலுவலகங்கள் 25ம் தேதி செயல்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு

சென்னை: வரும் 25ம் தேதி அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரித்துறை அலுவலகத்தில்  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், எதிர்வரும் பத்து நாட்களில் பதிவுக்கு ஆவணங்கள் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தினமும் கொடுக்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் 25ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாநிலத்தின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளார்.இந்த கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: