புதுடெல்லி: இந்தியா, வங்கதேசம் இடையே ரூ.377 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல் டீசல் பைப்லைனை பிரதமர்கள் மோடி மற்றும் ஷேக் ஹசீனா தொடங்கி வைத்தனர். இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் கொண்டு செல்ல ரூ.377 கோடியில் பைப்லைன் அமைக்கும் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான முதல் எல்லை தாண்டிய எரிபொருள் பைப்லைன் திட்டமாகும். இதில், வங்கதேச பகுதியில் பைப் லைன் அமைப்பதற்கான ரூ.285 கோடி செலவையும் இந்திய அரசே ஏற்றுக் கொண்டது. இந்த பைப்லைனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தனர்.