தாம்பரம்: தாம்பரம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞரை, போலீசார் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். திருமுடிவாக்கம் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, கடந்த 14ம் தேதி காணாமல் போனதாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், குன்றத்தூர் முருகன் கோயில் அருகில் சிறுமி தனது காதலன் சந்தோஷ்குமாருடன் (19) இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 2 பேரையும் நேற்று முன்தினம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.