சிறுமியை கடத்தி திருமணம் போக்சோவில் வாலிபர் கைது: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்

தாம்பரம்: தாம்பரம் அருகே  இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞரை, போலீசார் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். திருமுடிவாக்கம் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, கடந்த 14ம் தேதி காணாமல் போனதாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், குன்றத்தூர் முருகன் கோயில் அருகில் சிறுமி தனது காதலன் சந்தோஷ்குமாருடன் (19) இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 2 பேரையும் நேற்று முன்தினம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், சிறுமி மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் முதலாக நேரில் சந்தித்து பேசி, உடனே‌ பல்லாவரம் பிரதான சாலையில் பம்மல் பகுதியில் உள்ள புத்துக் கோயில் திருமணம் செய்து கொண்டு, இரவு சந்தோஷ்குமாரின் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: