திருவெறும்பூர், மே 13: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 36 ஆண்டுகளுக்கு முன் 1981 மற்றும் 1982 ஆண்டு 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களின் சங்கமம் துப்பாக்கி தொழிற்சாலை மக்கள் மன்றத்தில் நடந்தது. 36 ஆண்டுகளக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இன்று வயதானவர்களாக இருப்பதோடு அவர்கள் பல்வேறு அரசுதுறை, சுயதொழில் மற்றும் வெளிநாடுகளில் வேலைபார்த்தவர்கள் ஒன்று கூடி தங்களது பள்ளி நாட்களில் நடந்த மறக்கமுடியாத அனுபவங்களையும், நிகழ்வுகளை அனைவர் மத்தியிலும் நினைவு கூர்ந்தனர்.
