3 மாதத்தில் 5வது சோகம் நீட் தேர்வு மாணவி தற்கொலை

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நீட் தேர்வு மையத்தில் 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஏராளமான நீட் தேர்வு மையங்கள் உள்ளன. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நாடு முழுவதும் இருந்து சென்று அங்கு தங்கி படித்து வருகிறார்கள். பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் இருந்து 18 வயது மாணவி செம்புல் பர்வீன் என்பவர் அங்கு படித்து வந்தார். அவர் நேற்று தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கு சேர்ந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மாணவியின் பெற்றோரும் அங்குதான் உள்ளனர். அவர்கள் மாணவிக்கு புதிய விடுதி பார்க்க வந்திருந்தனர். கடந்த இரண்டரை மாதங்களில் கோட்டா நீட்பயிற்சி மையங்களில் நடந்த 5வது தற்கொலை இதுவாகும். 2022ல் 15 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Related Stories: