பெண்கள் இடஒதுக்கீடு மசோதா வலியுறுத்தி டெல்லியில் வட்ட மேஜை மாநாடு

ஐதராபாத்: தெலங்கானா முதல்வரின் மகளும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்சியுமான கவிதா கடந்த 10ம் தேதி பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை வலியுறுத்தி டெல்லியில் உண்ணாவிரதப் போாராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று அவர் டெல்லியில் வட்ட மேஜை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள ஓட்டலில் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் பல்வேறு அமைப்புக்கள் இதில் பங்கேற்கின்றன.

Related Stories: