பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக் ஜங்காலப்பள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆழ்துளை கிணறு அமைத்து பைப்லைன் மூலம் தெரு குழாய்களில் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் சேவையை தொடங்கிவைத்தார்.