தேனீக்களிடம் கொட்டு வாங்கியும் வலியுடன் தேர்வெழுதிய 50 மாணவர்கள்: ஒடிசாவில் அதிர்ச்சி!

கியோஞ்சர்: ஒடிசாவில் தேனீக்களிடம் கொட்டு வாங்கியும் அதே வலியுடன் 50 மாணவர்கள் தேர்வெழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கியோஞ்சர் மாவட்டம் ஹரிசந்தன்பூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வழக்கம் போல், மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் தேர்வு  மையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள மரத்தில் இருந்து வெளியே வந்த தேனீக்கள் கூட்டம், தேர்வு மையத்திற்குச் சென்று 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை துரத்தி துரத்தி கடித்துள்ளது. நாலாபுறமும் தப்பியோடிய மாணவர்களையும், ஆசிரியர்களையும் தேனீக்கள் கடித்த நிலையில், அந்த வலியையும் பொருட்படுத்தாமல், மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளார். பின்னர், அவர்கள் தேர்வு முடிந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Related Stories: