துபாய்: ஈரானின் குர்திஸ்கான் மாகாணத்தில் கடந்த செப்டம்பரில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறப்பு படை போலீசார் மாஷா அமினி(22) என்ற இளம்பெண்ணை கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்தபோது கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை ஆங்காங்கே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டனர் என்ற உண்மை விவரங்கள் வெளிவரவில்லை. 19,700 பேர் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.