நியூயார்க்: சிலிக்கான் வேலி வங்கியில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க கருவூலம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால் அதன் வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள் பெரும் அச்சத்தில் உள்ளன. இந்த வங்கியின் மொத்த டெபாசிட் தொகை ரூ.14.37 லட்சம் கோடி, வங்கியின் சொத்து மதிப்பு ரூ. 17.13 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கிடையே வங்கியின் திடீர் வீழ்ச்சியால் உலகளவில் வங்கித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.