சென்னை: சென்னை கண்டோன்மென்ட் கழக தேர்தலில், 15 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள விஷயத்தில், தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சென்னை கண்டோன்மென்ட் போர்டு தேர்தல் வரும் ஏப்ரல் 30ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் சுமார் 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கண்டோன்மெண்ட் எல்லைக்குள் வசிக்கும் குடிமக்கள் அனைவரும் குடிதண்ணீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கண்டோன்மென்ட் கழகத்தை சார்ந்துள்ளனர்.