சென்னை: டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக வெளியிடப்பட்ட பொய்யான அறிக்கையை அறப்போர் இயக்கம் திரும்ப பெறாவிட்டால் அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.
மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.