புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் செப்டம்பரில் தொடங்க உள்ள நிலையில், பலவீனமாக உள்ள 160 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆளும் பாஜக தொடங்கியுள்ளது. நாடுமுழுவதும் பலவீனமாக உள்ள 160 மக்களவைத் தொகுதிகளை அடையாளம் கண்டுள்ள பாஜக, அந்தத் தொகுதிகளில் வெற்றிப் பெறுவதற்காக வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த தொகுதிகளுக்கான ேதர்தல் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாஜக தேர்தல் குழு நிர்வாகிகள் கூறுகையில், ‘கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற 160 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்கண்ட 160 தொகுதிகளில் பிரதமர் மோடி 50 முதல் 60 கூட்டங்களை நடத்த உள்ளார். 3 முதல் 4 மக்களவைத் தொகுதிகளை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தப்படும்.