சிங்கப்பூர்: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தலைவருமான லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் அவர்களது மகன், மகள்கள் மீது ரயில்வே நிலம் - வேலை தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக லாலு பிரசாத் யாதவ், மனைவி ரப்ரி உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா வெளியிட்ட பதிவில், ‘எனது தந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் சும்மா விடமாட்டேன்.