பாக். ஆக்கிரமிப்பு பஞ்சாப்பில் தேர்தல் குண்டு துளைக்காத வாகனத்தில் இம்ரான் பேரணி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பஞ்சாப் மாகாணத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் இன்று முதல் தேர்தல் பிரசார பேரணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியை சேர்ந்த தலைவர் அகமத் அசார் கூறுகையில், ‘‘சமான் பார்க்கில் இருந்து கட்சியின் தலைவர் இம்ரான் கான் தலைமையில்  பிரசார பேரணி தொடங்கும்.  இம்ரான் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. எனவே  இம்ரான்   குண்டு துளைக்காத வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்த பிரசார பேரணி வரலாற்று சிறப்பு மிக்க பேரணியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: