பணி பெண்ணுக்கு அடி உதை: இந்திய வம்சாவளிக்கு சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வந்த இந்திய பெண்ணை  அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 13 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வருபவர் தீபகலா சந்திரசேகரன். இந்திய வம்சாவளி. இவரது  வீட்டில் வேலை செய்து வந்த இந்தியாவை சேர்ந்த எனி அகஸ்டின் என்ற பெண்ணை தீபகலா அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார்.   இது தொடர்பான வழக்கை விசாரித்த  நீதிபதி , தீபகலாவுக்கு 13 மாத சிறை தண்டனையும்   ரூ.2,43,260 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: