இஸ்லாமாபாத்: இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரன்ட்டை நிறுத்திவைக்க முடியாது என்று பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, விலைக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரன்டுடன் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை.