புவனேஸ்வர்: ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள புசந்தாபுர் கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நாளை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த பண்டிகைக்கான பட்டாசுகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.