துவாரகா: குஜராத் மாநிலம் துவாரகாவில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே பீதியுடன் வந்தனர். சிறிது நேரத்திற்கு பின் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.