திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி பிரம்மபுரம் குப்பைக் கிடங்கில் 5வது நாளாக பற்றி எரியும் தீயால் கடும் புகை மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எர்ணாகுளம் பகுதியில் சேகரிக்கப்படக்கூடிய குப்பைகளை கொச்சி பிரம்மபுரம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேகரித்து வைத்துள்ளனர். இந்த குப்பை கிடங்கில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. காற்றின் வேகமும், வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தீ மளமளவென எரிந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.