ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, பெருங்குடி 14வது மண்டலம், புழுதிவாக்கம் 186வது வார்டில் உள்ள ஷீலா நகர், ஏரிக்கரை தெரு, மடிப்பாக்கம் மற்றும் 187வது வார்டில் உள்ள அய்யப்பன் நகர், ஏரிக்கரை தெரு போன்ற பகுதிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் 137 தெரு விளக்குகளுடன் கூடிய எல்இடி விளக்குகளை இயக்கி ஒளிரவைக்கும் விழா புழுதிவாக்கம் ஷீலா நகர், மடிப்பாக்கம் ஐயப்பன் நகர் போன்ற பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார். மண்டலக் குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெ.கே.மணிகண்டன், ஸ்டெர்லி ஜெய் முன்னிலை வகித்தனர்.