புதுடெல்லி: ஜார்கண்டில் ஐஏஎஸ் பெண் அதிகாரிக்கு எதிராக பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 3கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்டில் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா சிங்கால், மாவட்ட கலெக்டராக பதவி வகித்த போது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பணபரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பெண் அதிகாரியான பூஜா சிங்கால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.