புதுடெல்லி: பிரபலங்கள் பெயரில் ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற அரசின் அடையாள அட்டை ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்விவகாரம் ெதாடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் இணை ஆணையர் கூறுகையில், ‘டெல்லி காவல்துறையின் கிழக்கு சைபர் பிரிவு போலீசார், பிரபலங்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது.