சச்சின், அலியா பட் போன்ற பிரபலங்களின் பெயரில் மோசடி: டெல்லியில் 5 பேர் கும்பல் கைது

புதுடெல்லி: பிரபலங்கள் பெயரில் ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற அரசின் அடையாள  அட்டை ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்விவகாரம் ெதாடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் இணை ஆணையர் கூறுகையில், ‘டெல்லி காவல்துறையின் கிழக்கு சைபர் பிரிவு போலீசார், பிரபலங்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது.

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், அலியா பட், மகேந்திர சிங் தோனி, அபிஷேக் பச்சன், சோனம் கபூர், ஹிமேஷ் ரேஷ்மியா, சுனில் ஷெட்டி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயரில் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர்’ என்றார்.

Related Stories: