இராயபுரம் திட்டப்பகுதியில் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்பினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பின்னர் தெரிவிக்கையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் பகுதி - 1 ரூ.77.01 கோடி மதிப்பீட்டில் தூண் தளத்துடன் 9  மாடிகளுடன் 648 குடியிருப்புகளும் , பகுதி - 2 ரூ.45.19 கோடி மதிப்பீட்டில்  தூண் தளத்துடன் 11  மாடிகளுடன் 396 குடியிருப்புகளும் மொத்தம் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் 1044 அடுக்குமாடி  குடியிருப்புகள்  5.29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 ச.அடி பரப்பளவு கொண்டதாகும்.   இத்திட்டப்பகுதியில் குடிநீர், மற்றும் கழிவு நீர் இணைப்புகள் மின்தூக்கி வசதி, மின்னாக்கி, தீ அணைக்கும் கருவி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இவ்வடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணி 9.7.2018 அன்று  தொடங்கப்பட்டு டிசம்பர் 2020 பெரும்பாலான கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. சுற்றுச்சூழல் , CMDA, சென்னை மாநகராட்சி, RERA, ஆகிய அனுமதிகள் பெறாததால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்புகள் 2 ஆண்டுகளாக வழங்கப்பபடவில்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின் அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக இத்திட்டப்பகுதிக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், CMDA திட்ட அனுமதியும், சென்னை மாநகராட்சி கட்டட அனுமதியும், RERA அனுமதியும் பெறப்பட்டது. இன்னும் 2 மாதத்திற்குள் மின் இணைப்பு , குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகள் முடிக்கப்பட்டு, விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Related Stories: