புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என இங்கிலாந்திடம் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ஊடக நிறுவனம் பிபிசி, 2002ம் ஆண்டு குஜராத் கலவர ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஆவணப்படத்தை ஒன்றிய அரசு தடைசெய்தது. மேலும் ஆவணப்படத்தை தயாரித்த பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது. அதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்தது.