மதுரை: கண்மாய்கள், நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் கீழ் ஏற்கனவே தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டிருந்தனர்.
