வடகொரியா: வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் அவற்றை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். வடகொரியநாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும். உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.