ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை..!!

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் உள்ள பகுதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அறிக்கையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கும், பெயர் சேர்க்கப்பட்டதற்கும் தடை கோரி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

Related Stories: