ஹாங்காங்: ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்கு பின்னர் முகக் கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கின. அந்த வகையில் ஹாங்காங் நாடும் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவதை கட்டாயப்படுத்தியது. தற்போது கொரோனா அச்சம் நீங்கிய நிலையில் பல நாடுகளும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கவில்லை.