தேனி: தேனி மாவட்டம் போடிக்கு அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி பகுதியில் அடர்ந்த வனப்பகுதி சூழ்ந்த அரியவகை உயிரினங்களும் உயர்ந்த மரங்களும் உள்ள பகுதியாகும். தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. இந்நிலையில் முந்தல் பகுதியில் இருந்து குரங்கணிக்கு செல்லும் பாதையில் உள்ள அடகுப்பாறை எனும் வனப்பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பற்றியெறிந்து வருகிறது.