மின்வாரிய ஊழியர்களுக்கு 3% ஊதிய உயர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு, 2023ம் டிசம்பர் 1ம் தேதி நாளன்று பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வும், 2023ம் டிசம்பர் 1ம் தேதி நாளன்று, 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கு பணிப் பலனாக 2023ம் ஆண்டு டிசம்பர் 1ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. அலுவலர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை சிறப்புப்படியும் வழங்கப்படுகிறது. 2025ம் டிசம்பர் 1ம் நாள் முதல் பணப் பலன்கள் வழங்கவும். மேலும், இடைப்பட்ட காலத்திற்கு அதாவது 2023ம் ஆண்டு டிசம்பர் கருணைத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் கணக்கிட்டு 24 மாதங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: