வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தெற்கு கரோலினா ஆளுநராக 2 முறை பதவி வகித்தவருமான நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில், நியூயார்க் போஸ்ட் இதழில் எழுதிய அரசியல் கட்டுரையில், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கான நிதி உதவியை நிறுத்துவேன் என்று நிக்கி ஹாலே கூறியுள்ளார்.