ஆத்தூர்: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சேர்ந்தவர் வசந்தகுமார். இவருக்கு சொந்தமான மினி லாரியில் கும்பகோணத்திற்கு செல்வதற்காக இன்று அதிகாலை புறப்பட்டார். ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க மினிலாரியை திருப்பினார். அப்போது நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவரில் மோதி சாலையில் மினிலாரி கவிழ்ந்தது.