உடுமலை: உடுமலை பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீரால் பயணிகள் அவதிப்படுகின்றனர். உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓட்டல் மற்றும் பேக்கரி கழிவுநீரை முறையாக வெளியேற்றாததால் பேருந்து நிலையத்தில் தேங்கி வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.