மும்பை: தனியுரிமை மீதான அத்துமீறல் அதன் எல்லையை தாண்டிவிட்டது என்று நடிகை அலியா பட் ஆவேச பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு பல நடிகர், நடிகைகள் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், கடந்த சில தினங்களுக்கு முன் அவரது அனுமதியின்றி அவரது வீட்டிற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் படத்தொகுப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்தப் பதிவில், ‘நீங்கள் என்ன விளையாடுகிறீர்களா. எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை உணர்ந்தேன். அப்போது, வீட்டின் மேல்மாடியை பார்த்த போது, என்னுடைய மொட்டை மாடியில் நின்றிருந்த இரண்டு நபர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோன்ற செயல்களால் எனது தனி உரிமை பாதிக்கப்படுகிறது.