புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் ராகுல்காந்தி குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார். சீன பிரச்னை பற்றிய கேள்வி எழுப்பிய போது ராகுல்காந்தியை விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் நேற்று பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் இதுபற்றி கூறியதாவது: ஒன்றிய வெளியுறவுத்துறை இப்போது ஒரு தொழிலதிபருக்கு ஒப்பந்தங்களைப் பெற பயன்படுத்தப்படுகிறது. மேலும் சீன பிரச்னை பற்றி கேட்டால் நாங்கள் சிறிய பொருளாதாரம் கொண்டவர்கள், சீனா பெரிய பொருளாதாரம் கொண்டது. அவர்களுடன் சென்று சண்டையிட முடியாது என்று அமைச்சர் கூறுகிறார்.