ஸ்ரீபெரும்புதூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உமேஷ் (21), உஸ்மான் (28), அஸ்மான் (30). இவர்கள், 3 பேரும், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், 3 பேரும் நேற்று முன்தினம் வேலை முடிந்து நாவலூர் கிராமத்தில் வசித்து வரும் நண்பர்களை சந்திக்க ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்றுள்ளனர். அப்போது, போந்தூர் பகுதியில் சென்றபோது அங்கு நின்றிருந்த வாலிபர்கள், வடமாநில வாலிபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள், ரூ.2,700 பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.