நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வரும் மார்ச் 5ம் தேதி மாசிக்கொடை விழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 14ம் தேதி ஒடுக்குப்பூஜையுடன் கொடை நிறைவடைகிறது.
பல வருடமாக ஹைந்தவ சேவா சங்கம் நடத்தி வந்த சமய மாநாட்டை இந்த வருடம் அறநிலையத்துறை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஹைந்தவ சேவா சங்கம் அதிருப்தியடைந்து உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.