சிவன் கோயிலில் திரிஷா பாலாபிஷேகம்

ஜம்மு: காஷ்மீரிலுள்ள சிவன் கோயிலில் நடிகை திரிஷா சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்தார். பொன்னியின் செல்வன், ராங்கி படங்களில் நடித்த திரிஷா, அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 படத்தை எதிர்பார்த்திருக்கிறார். விஜய் ஜோடியாக லியோ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீரில் இருக்கிறார் திரிஷா. நேற்று முன்தினம் சிவராத்திரி என்பதால் அவர் காஷ்மீரிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்றார். அங்கு சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்தார்.

சமீபகாலமாக திரிஷா, ஆன்மிகத்தில் ஈடுபாடு செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியிலும் அவர் பல்வேறு ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வந்தார். வழக்கமாக தோழிகளுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்லும் அவர், கடந்த சில மாதமாக அதை தவிர்த்து ஆன்மிக சுற்றுலாவில் ஆர்வம் காட்டி வருகிறார். லியோ படத்தில் நடிகர், நடிகைகள் பலருடன் அவர் நடித்து வந்தாலும், சிவன் கோயிலுக்கு தனியாகத்தான் சென்று வந்துள்ளார். யாரையும் அவர் உடன் அழைத்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: