புதுடெல்லி: துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணிகள் மற்றும் சுகாதார உதவிகளை வழங்க ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்தியா உடனடியாக உதவிக்கரம் நீட்டியது. தேசிய பேரிடர் மீட்புப் பணியின் 151 வீரர்களும், மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இதே ராணுவ மருத்துவ குழுவினரும் மருத்துவ உபகரணங்களுடன் துருக்கி புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், துருக்கியில் தற்போது மீட்புப்பணிகள் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்திய குழுவினர் நேற்று புறப்பட்டனர்.